search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோப் கார் சேவை"

    பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தப்படும் ரோப் கார் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை நிறுத்தப்படுகிறது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவை மூலமாக மலைக்கோவில் செல்கின்றனர்.

    இதில் விரைவாக செல்வதில் ரோப்கார் முதலிடம் பிடிப்பதால் மலைக்கோவிலுக்கு செல்ல குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரின் முதல் விருப்பமாக அது உள்ளது. இந்த ரோப்கார் சேவை காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுகிறது. இதற்காக மலைக்கோவிலில் காற்றின் வேகத்தை கணக்கிடும் நவீன கருவி உள்ளது.

    காற்று அதிகம் வீசும் நேரங்களில் ரோப்கார் சேவை நிறுத்தப்படும். மேலும் மாதத்திற்கு ஒரு நாள் மற்றும் ஆண்டுக்கு ஒரு மாதம் என பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதை முன்னிட்டு அன்று ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.

    ஆனால் மின்இழுவை ரெயில் சேவை வழக்கம்போல் செயல்படும். எனவே மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மின்இழுவை ரெயில், யானைப்பாதை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×